search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மழை எதிரொலி"

    சிம்ஸ் பூங்காவில் கடந்த மாதம் பூத்து குலுங்கிய அழகிய மலர்கள் மழை காரணமாக அழுகி உதிர்ந்துவிட்டன.
    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால் சுற்றுலா தளங்களும் இயற்கை காட்சி முனைகளும் அதிக அளவில் உள்ளன. நீலகிரி மாவட்டத்தின் தலைநகரான ஊட்டியை அடுத்து குன்னூர் சுற்றுலாவில் முக்கியத்துவம் பெறுகிறது. குன்னூரில் சிம்ஸ் பூங்கா, இயற்கை காட்சி முனைகளான லம்ஸ்ராக், டால்பின் நோஸ் போன்றவைகள் சுற்றுலா பயணிகளால் அதிகம் விரும்பி பார்க்கும் இடங்கள் ஆகும். சிம்ஸ் பூங்காவில் ஆண்டுதோறும் மே மாதம் கடைசி வாரத்தில் நடைபெறும் பழக்கண்காட்சியை முன்னிட்டு புதிய மலர் நாற்றுகள் நடவு செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு 60- வது பழக்கண்காட்சி கடந்த மே மாதம் 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

    இந்த மலர் கண்காட்சியை முன்னிட்டு கடந்த பிப்ரவரி மாதம் 2½ லட்சம் புதிய மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டன. இவைகள் கடந்த மே மாதம் பழக்கண்காட்சி நேரத்தில் நன்கு பூத்து சுற்றுலா பயணிகளை மகிழ்வித்தது. மே மாதம் கடைசி வாரத்திலிருந்து குன்னூர் பகுதியில் மழை பெய்து வருகிறது. தற்போது காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சிம்ஸ் பூங்காவில் கடந்த மாதம் பூத்து குலுங்கிய அழகிய மலர்கள் மழை காரணமாக அழுகி உதிர்ந்துவிட்டன. மேலும் மழையின் எதிரொலியாக சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது. 
    சதுரகிரி மலையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பக்தர்கள் இன்று மலைக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர்.
    பேரையூர்:

    மதுரை மாவட்டம், பேரையூர் அருகே உள்ள சதுரகிரி மலையில் பிரசித்தி பெற்ற சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. இங்கு பவுர்ணமி, அமாவாசை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    நேற்று அமாவாசையை முன்னிட்டு 4 நாட்கள் பக்தர்கள் மலைக்கு செல்ல வனத்துறையினர் அனுமதி அளித்து இருந்தனர்.

    இந்த நிலையில் சதுரகிரி மலையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அங்குள்ள மாங்கனி ஓடை, சங்கிலி பாறை, கருப்பசாமி பாறை பகுதிகளில் உள்ள ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இதையடுத்து பக்தர்கள் இன்று மலைக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். மேலும் மலைக்கு மேல் கோவிலில் உள்ள 500 பக்தர்கள் கீழே இறங்க வேண்டாம் என வனத்துறை அறிவுறுத்தி உள்ளது.

    மழை நின்று இயல்பு நிலைக்கு வந்த பின் பக்தர்கள் அடிவாரத்துக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை தெரிவித்துள்ளது.

    ×